search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை - பிரதமர் மோடி நாளை ரஷியா பயணம்
    X

    இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை - பிரதமர் மோடி நாளை ரஷியா பயணம்

    இந்தியா ரஷ்யா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் விளாடிமிர் புதினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி நாளை ரஷியாவின் சோச்சி நகருக்கு செல்கிறார். #VladimirPutin #NarendraModi
    புதுடெல்லி:

    ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி சோச்சி நகருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ரஷிய பயணத்தை முன்னிட்டு டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, “ரஷ்ய மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அதிபர் புதினை சந்திக்க நாளை சோச்சி நகர் பயணம் செய்ய உள்ளேன். அவரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. மேலும், அதிபர் புதினுடனான இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படுத்தப்படும் என நம்புகிறேன்” 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #VladimirPutin #NarendraModi
    Next Story
    ×