search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக அடுத்த வாரம் மும்பை மற்றும் பெங்களூரு செல்கிறார்
    X

    லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக அடுத்த வாரம் மும்பை மற்றும் பெங்களூரு செல்கிறார்

    பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக அடுத்த வாரம் மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  ஒவ்வாமை, மயக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் லாலு அடுத்தகட்ட சிகிச்சைக்காக மும்பை அழைத்துச்செல்லப்பட உள்ளார்.

    லாலுவுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் உள்ள மும்பை புறநகர் பகுதியான பந்த்ரா குர்லா எனும் இடத்தில் அமைந்துள்ள பிரபல இதவியல் மருத்துவமனையில் இரண்டு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது, அதே மருத்துவமனையில் லாலுவுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    மேலும், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கும் லாலு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  #LaluPrasadYadav
    Next Story
    ×