என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது - அமித்ஷா கடும் தாக்கு
Byமாலை மலர்17 May 2018 11:21 PM GMT (Updated: 17 May 2018 11:21 PM GMT)
வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று அமித்ஷா கூறியுள்ளார். #Amitsha #KarnatakaCMRace
புதுடெல்லி:
கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆட்சியமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். இதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கர்நாடகாவில் பா.ஜனதா 104 இடங்களை பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ 78 இடங்களே கிடைத்துள்ளன. எனவே அங்கு பா.ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் பல மந்திரிகள் தோல்வியடைந்துள்ளனர். வெறும் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளமும், பல இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமித்ஷா, இது அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப்போல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சிதான் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். #Amitsha #KarnatakaCMRace
கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆட்சியமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். இதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கர்நாடகாவில் பா.ஜனதா 104 இடங்களை பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ 78 இடங்களே கிடைத்துள்ளன. எனவே அங்கு பா.ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் பல மந்திரிகள் தோல்வியடைந்துள்ளனர். வெறும் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளமும், பல இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமித்ஷா, இது அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப்போல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சிதான் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். #Amitsha #KarnatakaCMRace
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X