search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரம் - கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை
    X

    டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரம் - கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை

    டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #DelhiChiefSecretary #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவிக்லைனில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்றார்.

    கூட்டத்தின் போது வார்த்தைகள் மோதலால் தலைமை செயலாளரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார்.



    எம்.எல்.ஏ.க்கள் அஜத்தத், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கவர்னரிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #DelhiChiefSecretary #ArvindKejriwal

    Next Story
    ×