என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம் கைவிரிப்பு
Byமாலை மலர்4 May 2018 11:22 AM GMT (Updated: 4 May 2018 11:22 AM GMT)
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #Westbengal #Panchayatpoll #Highcourt
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் மே 1 முதல் 5 தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் தேதியை மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒரே கட்டமாக மே 14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை மாற்றியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த தனி நீதிபதி தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என தெரிவித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரிட்ஜு கோசல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சோமாதர் மற்றும் நீதிபதி முகர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, மேற்குவங்க மாநிலம் பஞ்சாயத்து தேர்தல் நடைமுறை தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ரிட்ஜு கோசல் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினர். #Westbengal #Panchayatpoll #Highcourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X