
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். விசாரணையில் இவர் ரெகானா பைசான் அகமத் கான் என்பதும், அபுதாபியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
ரெகானா தங்கத்தினை தனது பையில் சிந்தடிக் ரப்பர் கொண்டு ஒட்டி வைத்து கடத்தியுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் அவரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர். #goldsmuggling #puneairport