search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் சோகம் - சாலை பாதுகாப்பு வாரத்தில் ஒரே நாளில் 28 பேர் பலி
    X

    உ.பி.யில் சோகம் - சாலை பாதுகாப்பு வாரத்தில் ஒரே நாளில் 28 பேர் பலி

    சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் சாலை விபத்துக்களில் 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் சாலையில் நின்றிருந்த லாரி மீது வாகனம் மோதியதில் 13 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல், பாண்டாவில் 3 பேரும், ஷாஜஹான்பூரில் 2 பேரும், கன்னூஜில் 4 பேரும், மாவ், சோனபத்ரா, டியோரியா பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகினர். இதேபோல் இந்த விபத்துகளில் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
      
    இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் சாலை விபத்துக்களில் 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சாலை பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக மதித்து நடக்க  வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். #Tamilnews
    Next Story
    ×