என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் சோகம் - சாலை பாதுகாப்பு வாரத்தில் ஒரே நாளில் 28 பேர் பலி
Byமாலை மலர்28 April 2018 8:26 PM GMT (Updated: 28 April 2018 8:26 PM GMT)
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் சாலை விபத்துக்களில் 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் சாலையில் நின்றிருந்த லாரி மீது வாகனம் மோதியதில் 13 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், பாண்டாவில் 3 பேரும், ஷாஜஹான்பூரில் 2 பேரும், கன்னூஜில் 4 பேரும், மாவ், சோனபத்ரா, டியோரியா பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகினர். இதேபோல் இந்த விபத்துகளில் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் சாலை விபத்துக்களில் 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சாலை பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X