search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் - கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தகவல்
    X

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் - கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தகவல்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் போன்ற பல திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. #KarnatakaElection2018 #congress #RahulGandhi
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மங்களூரில் இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சியான திட்டங்கள் இடம் பெற்று இருக்கிறது. அதில், காவிரியில் வீணாகும் தண்ணீரை நன்றாக பயன்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:-

    இந்த தேர்தல் அறிக்கை கர்நாடக மக்களின் குரலாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். இதையும் நிறைவேற்றுவோம். இது ஆர்.எஸ்.எஸ். தயாரிக்கும் சிலருக்கான அறிக்கை இல்லை. இது காங்கிரசின் மக்களுக்கான அறிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #congress #RahulGandhi

    Next Story
    ×