என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லூதியானா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தீயணைப்பு பணியில் 100 வாகனங்கள்
Byமாலை மலர்27 April 2018 7:17 AM GMT (Updated: 27 April 2018 7:17 AM GMT)
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. #punjab #ludhianafireaccident
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் பகதூர் கே சாலையில் உள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள் கொழுந்துவிட்டு எரிந்தால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மூன்று முறை தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்தும் பலன் இல்லை.
இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மூலம் விடிய விடிய தீயணைப்பு பணி நடைபெற்றது. இருப்பினும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.#punjab #ludhianafireaccident
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் பகதூர் கே சாலையில் உள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள் கொழுந்துவிட்டு எரிந்தால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மூன்று முறை தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்தும் பலன் இல்லை.
இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மூலம் விடிய விடிய தீயணைப்பு பணி நடைபெற்றது. இருப்பினும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.#punjab #ludhianafireaccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X