என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்செல் முன்னாள் அதிபர் நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கு பதிவு
Byமாலை மலர்27 April 2018 12:14 AM GMT (Updated: 27 April 2018 12:14 AM GMT)
ஏர்செல் முன்னாள் அதிபரின் 2 நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உள்பட 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
புதுடெல்லி:
ஏர்செல் முன்னாள் அதிபரின் 2 நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உள்பட 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன். பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள அக்சல் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் வின் விண்ட் ஓய் ஆகிய நிறுவனங்கள் இவருக்கு சொந்தமானவை ஆகும்.
அந்த நிறுவனங்களின் பெயரில், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிவசங்கரன் ரூ.530 கோடி கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடன் ஆகி, கடன் தொகை ரூ.600 கோடியாக உயர்ந்துவிட்டது.
இந்த கடன் மோசடி தொடர்பாக சிவசங்கரனின் மேற்கண்ட 2 நிறுவனங்கள் மீதும், அவற்றில் பணியாற்றிய தலைவர், இயக்குனர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழல் ஆகியவை தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடன் மோசடியில், ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதனால், ஐ.டி.பி.ஐ. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த கிஷோர் கரத் (தற்போது, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்), துணை நிர்வாக இயக்குனராக இருந்த மெல்வின் ரெகோ (தற்போது, சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்) உள்பட 15 உயர் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.
சென்னை, டெல்லி, பரிதாபாத், மும்பை, காந்திநகர், பெங்களூரு, பெல்காம், ஐதராபாத், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
ஏர்செல் முன்னாள் அதிபரின் 2 நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உள்பட 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன். பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள அக்சல் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் வின் விண்ட் ஓய் ஆகிய நிறுவனங்கள் இவருக்கு சொந்தமானவை ஆகும்.
அந்த நிறுவனங்களின் பெயரில், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிவசங்கரன் ரூ.530 கோடி கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடன் ஆகி, கடன் தொகை ரூ.600 கோடியாக உயர்ந்துவிட்டது.
இந்த கடன் மோசடி தொடர்பாக சிவசங்கரனின் மேற்கண்ட 2 நிறுவனங்கள் மீதும், அவற்றில் பணியாற்றிய தலைவர், இயக்குனர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழல் ஆகியவை தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடன் மோசடியில், ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதனால், ஐ.டி.பி.ஐ. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த கிஷோர் கரத் (தற்போது, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்), துணை நிர்வாக இயக்குனராக இருந்த மெல்வின் ரெகோ (தற்போது, சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்) உள்பட 15 உயர் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.
சென்னை, டெல்லி, பரிதாபாத், மும்பை, காந்திநகர், பெங்களூரு, பெல்காம், ஐதராபாத், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X