search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல்
    X

    கைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல்

    உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Electioncommision
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.  

    இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

    இந்த தொகுதிகளுக்கு  வேட்பு மனுதாக்கல் மே 3-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #Electioncommision #Tamilnews
    Next Story
    ×