என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றியது மேற்கு வங்காளம் தேர்தல் ஆணையம்
Byமாலை மலர்26 April 2018 12:57 PM GMT (Updated: 26 April 2018 12:57 PM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றி அமைத்து மாநில தேர்தல் ஆணையம் புதிய தேதிகளை வெளியிட்டுள்ளது. #WestBengalPanchayatPolls
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக பா.ஜ.க ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த திங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தது.
இந்நிலையில், புதிய தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. முன்பு மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 14-ம் தேதி தேர்தல் 17-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் 16-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WestBengalPanchayatPolls
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக பா.ஜ.க ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த திங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தது.
இந்நிலையில், புதிய தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. முன்பு மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 14-ம் தேதி தேர்தல் 17-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் 16-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WestBengalPanchayatPolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X