என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்23 April 2018 6:52 PM GMT (Updated: 23 April 2018 6:52 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிமல்கட்டா என்ற இடத்தில் உள்ள ராஜாராம் கண்ட்லா வனப்பகுதியில் இன்று நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே தீவிர துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இதே பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X