search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்
    X

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் படையினர் சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணகாதி பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். சிறிது நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர், #tamilnews
    Next Story
    ×