என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்
Byமாலை மலர்23 April 2018 1:11 AM GMT (Updated: 23 April 2018 1:11 AM GMT)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளராக மிண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி, காங்கிரசுடன் இனி மா.கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளாது என தெரிவித்துள்ளார். #SitaramYechury #CPIM
ஐதராபாத்:
ஐதராபாத் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது.
இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான பட்டியலில் தற்போதைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தவிர, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பிருந்தா கரத், செயலாளர் பி.பி.ராகவலு ஆகியோருடைய பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
சீதாராம் யெச்சூரி பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் நேரடியாக தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டியதால் கட்சியில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதனால் அவரை 2-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தயக்கம் காட்டினர். குறிப்பாக முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் யெச்சூரிக்கு இருந்த எதிர்ப்பு விலகியது.
இதைத்தொடர்ந்து கட்சியின் புதிய மத்திய குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 95 பேரும் சீதாராம் யெச்சூரியை 2-வது முறையாக தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஒரு மனதாக பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, நினைவு கூரத்தக்கது.
மாநாடு நிறைவடைந்ததும், சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலங்களின் கள நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்கும். காங்கிரசுடன் கூட்டணி கிடையாது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும், உள்ளேயும் வெளியேயும் வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்த ‘புரிந்துகொள்ளல்’ அடிப்படையில் செயல்படுவோம்” என்றார். #SitaramYechury #CPIM
ஐதராபாத் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது.
இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான பட்டியலில் தற்போதைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தவிர, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பிருந்தா கரத், செயலாளர் பி.பி.ராகவலு ஆகியோருடைய பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
சீதாராம் யெச்சூரி பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் நேரடியாக தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டியதால் கட்சியில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதனால் அவரை 2-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தயக்கம் காட்டினர். குறிப்பாக முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் யெச்சூரிக்கு இருந்த எதிர்ப்பு விலகியது.
இதைத்தொடர்ந்து கட்சியின் புதிய மத்திய குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 95 பேரும் சீதாராம் யெச்சூரியை 2-வது முறையாக தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஒரு மனதாக பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, நினைவு கூரத்தக்கது.
மாநாடு நிறைவடைந்ததும், சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலங்களின் கள நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்கும். காங்கிரசுடன் கூட்டணி கிடையாது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும், உள்ளேயும் வெளியேயும் வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்த ‘புரிந்துகொள்ளல்’ அடிப்படையில் செயல்படுவோம்” என்றார். #SitaramYechury #CPIM
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X