என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்22 April 2018 11:54 PM GMT (Updated: 22 April 2018 11:54 PM GMT)
மராட்டிய மாநிலத்தில் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே:
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் இந்தாபூர் தாலுகா கர்தன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் சோபன் பவார்(வயது48). விவசாயி. அவர் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசந்த் சோபன் பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த் சோபன் பவார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கிராமத்தில் உள்ள நீர்பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடாததால் அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், தண்ணீர் திறக்கப்படாததற்கு 2 மராட்டிய மந்திரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த கடிதம் வசந்த் சோபன் பவாரால் தான் எழுதப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் இந்தாபூர் தாலுகா கர்தன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் சோபன் பவார்(வயது48). விவசாயி. அவர் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசந்த் சோபன் பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த் சோபன் பவார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கிராமத்தில் உள்ள நீர்பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடாததால் அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், தண்ணீர் திறக்கப்படாததற்கு 2 மராட்டிய மந்திரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த கடிதம் வசந்த் சோபன் பவாரால் தான் எழுதப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X