என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் - வருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை
Byமாலை மலர்22 April 2018 2:56 PM GMT (Updated: 22 April 2018 2:56 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தினுள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். பின்னர், அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர்.
பெட்டகத்தின் உள்ளே இருந்த சுமார் 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். பின்னர், அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர்.
பெட்டகத்தின் உள்ளே இருந்த சுமார் 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X