search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் கொடூரம் - ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
    X

    பீகாரில் கொடூரம் - ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

    பீகாரின் சுபால் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாட்னா:

    பீகாரின் சுமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் மண்டல். அவரது மனைவி இங்கு தேவி (21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில், நேற்று பிரச்சனை முற்றவே இங்கு தேவியின் கையை கணவர் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார். பின்னர் கத்தியால் தங்கள் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் இங்கு தேவியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    அதன்பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இங்கு தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இங்கு தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவர், கணவரின் தாயர் மற்றும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை தந்தையே அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×