என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் கொடூரம் - ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
Byமாலை மலர்21 April 2018 7:57 PM GMT (Updated: 21 April 2018 7:57 PM GMT)
பீகாரின் சுபால் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகாரின் சுமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் மண்டல். அவரது மனைவி இங்கு தேவி (21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிரச்சனை முற்றவே இங்கு தேவியின் கையை கணவர் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார். பின்னர் கத்தியால் தங்கள் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் இங்கு தேவியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அதன்பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இங்கு தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இங்கு தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவர், கணவரின் தாயர் மற்றும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை தந்தையே அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X