என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். சூதாட்டம் - நொய்டாவில் 3 பேர் கைது
Byமாலை மலர்21 April 2018 3:14 AM GMT (Updated: 21 April 2018 3:14 AM GMT)
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நொய்டா:
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சூதாட்ட கும்பலை கைது செய்துவருகின்றனர்.
அவ்வகையில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சிலர் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீசார், சூதாட்டம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர். பின்னர் சூதாட்ட கும்பல் இருந்த 11-வது மாடிக்குச் சென்று 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப், 2 எல்.இ.இ. டிவி மற்றும் ஒரு பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சென்னையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சூதாட்ட கும்பலை கைது செய்துவருகின்றனர்.
அவ்வகையில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சிலர் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீசார், சூதாட்டம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர். பின்னர் சூதாட்ட கும்பல் இருந்த 11-வது மாடிக்குச் சென்று 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப், 2 எல்.இ.இ. டிவி மற்றும் ஒரு பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சென்னையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X