என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிபதி லோயா மரண வழக்கு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
Byமாலை மலர்20 April 2018 5:38 AM GMT (Updated: 20 April 2018 5:38 AM GMT)
அமித்ஷாவின் குணநலன்களை படுகொலை செய்வதற்கு நீதித்துறையை பயன்படுத்தியமைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
லக்னோ:
பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜனதா, இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘அமித்ஷாவின் குணநலன்களை படுகொலை செய்வதற்கு நீதித்துறையை பயன்படுத்தியமைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் நல வழக்குகள், பொதுநல வழக்காக பதியப்பட்டு இருக்கிறது’ என்றார்.
இதைப்போல பா.ஜனதாவை சேர்ந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நீதிபதி லோயா மரணத்தில் உள்ள அனைத்து குழப்பங்களையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருப்பதாக கூறிய அவர், இதன்மூலம் காங்கிரசின் சதியும் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜனதா, இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘அமித்ஷாவின் குணநலன்களை படுகொலை செய்வதற்கு நீதித்துறையை பயன்படுத்தியமைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் நல வழக்குகள், பொதுநல வழக்காக பதியப்பட்டு இருக்கிறது’ என்றார்.
இதைப்போல பா.ஜனதாவை சேர்ந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நீதிபதி லோயா மரணத்தில் உள்ள அனைத்து குழப்பங்களையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருப்பதாக கூறிய அவர், இதன்மூலம் காங்கிரசின் சதியும் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X