search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் தொடரும் கொடூரம் - 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
    X

    உ.பி.யில் தொடரும் கொடூரம் - 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் இடா நகரில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தைக்கு புகாரை வாபஸ் பெறும்படி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்தார். மேலும், விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், உ.பி.யின் இடா நகரில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள கெல்டா அருகே திருமண விழா நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த 9 வயது சிறுமியை திருமணத்துக்கு வந்த வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

    பெண்ணின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று பலாத்காரம் செய்த வாலிபரை மடக்கி பிடித்தனர். உடனே அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×