என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமி பலாத்காரம் நாட்டுக்கே அவமானம் - ஜனாதிபதி வேதனை
Byமாலை மலர்18 April 2018 8:54 AM GMT (Updated: 18 April 2018 8:54 AM GMT)
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம். வெட்கக்கேடானது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.
ஜம்மு:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அவருடன் அவரது மனைவி சவீதா கோவிந்தும் சென்றார்.
ராம்நாத் கோவிந்தை கவர்னர் என்.என். வோரா, முதல்-மந்திரி மெகபூபா முப்தி, சபாநாயகர் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.
ஜம்முவின் கத்ரா பகுதியி உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
அப்போது கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டின் எந்த பகுதியிலும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம். வெட்கக்கேடானது. எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
எந்த ஒரு சிறுமிக்கோ அல்லது பெண்களுக்கோ இது போன்ற சம்பவம் ஏற்படாமல் உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.
காமன்வெல்த் விளையாட்டில் மேரிகோம், மனிகா பத்ரா, மீராபாய் சானு, சங்கீதா சானு, மனு பாக்கர், வினேஷ் போகத், சாய்னா நேவால், ஹீனாசிந்து போன்ற இந்தியாவின் மகள்கள் நமக்கு கவுரவத்தை தேடி தந்துள்ளனர்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார். #tamilnews
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அவருடன் அவரது மனைவி சவீதா கோவிந்தும் சென்றார்.
ராம்நாத் கோவிந்தை கவர்னர் என்.என். வோரா, முதல்-மந்திரி மெகபூபா முப்தி, சபாநாயகர் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.
ஜம்முவின் கத்ரா பகுதியி உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
அப்போது கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டின் எந்த பகுதியிலும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம். வெட்கக்கேடானது. எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
எந்த ஒரு சிறுமிக்கோ அல்லது பெண்களுக்கோ இது போன்ற சம்பவம் ஏற்படாமல் உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.
காமன்வெல்த் விளையாட்டில் மேரிகோம், மனிகா பத்ரா, மீராபாய் சானு, சங்கீதா சானு, மனு பாக்கர், வினேஷ் போகத், சாய்னா நேவால், ஹீனாசிந்து போன்ற இந்தியாவின் மகள்கள் நமக்கு கவுரவத்தை தேடி தந்துள்ளனர்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X