என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனார் கைது
Byமாலை மலர்17 April 2018 6:06 AM GMT (Updated: 17 April 2018 6:06 AM GMT)
குழந்தையை பார்க்க வந்தபோது பிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டக்காடு வஞ்சியூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 28). இவர் திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி அலினா (25). இவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 12-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விபரம் குறித்து குடும்பத்தகராறு காரணமாக மாமனார் உதயகுமார் உள்பட யாரும் கிருஷ்ணகுமாருக்கு தெரியப்படுத்தவில்லை.
நேற்று இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகுமார் தனது நண்பர் அகில் என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆஸ்பத்திரிக்குள் பிரசவ வார்டுக்கு சென்றபோது மாமனார் அங்கு இருந்தார்.
அப்போது குழந்தை பிறந்த விபரம் குறித்த தனக்கு தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகனை சரமாரியாக குத்தினார். இதனை தடுத்த அவரது நண்பர் அகிலையும் குத்தினார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.
ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த டாக்டர், ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அகிலுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவரை தந்தையே குத்திக்கொன்ற தகவல் கேட்டு குழந்தை பெற்ற அலினா கதறி அழுதார்.
இதுகுறித்து வஞ்சியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கத்தியால் குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டக்காடு வஞ்சியூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 28). இவர் திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி அலினா (25). இவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 12-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விபரம் குறித்து குடும்பத்தகராறு காரணமாக மாமனார் உதயகுமார் உள்பட யாரும் கிருஷ்ணகுமாருக்கு தெரியப்படுத்தவில்லை.
நேற்று இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகுமார் தனது நண்பர் அகில் என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆஸ்பத்திரிக்குள் பிரசவ வார்டுக்கு சென்றபோது மாமனார் அங்கு இருந்தார்.
அப்போது குழந்தை பிறந்த விபரம் குறித்த தனக்கு தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகனை சரமாரியாக குத்தினார். இதனை தடுத்த அவரது நண்பர் அகிலையும் குத்தினார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.
ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த டாக்டர், ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அகிலுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவரை தந்தையே குத்திக்கொன்ற தகவல் கேட்டு குழந்தை பெற்ற அலினா கதறி அழுதார்.
இதுகுறித்து வஞ்சியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கத்தியால் குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X