என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்17 April 2018 5:19 AM GMT (Updated: 17 April 2018 5:19 AM GMT)
கேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் போதிய சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழந்தார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மானந்தவாடி எடவக கிராம பஞ்சாயத்து பனிய காலனியை சேர்ந்தவர் வேரன். இவரது மனைவி சப்பயா (வயது 61). ஆதிவாசிகளான இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சப்பயாவுக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சப்பயாவுக்கு உடனே மருத்துவம் கிடைக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் ஊசி, மருந்து கொடுத்து நாளைக்கு வரும்படி கூறினர்.
ஆனால் சப்பயாவின் உடல் நலம் மோசமாக உள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் சப்பயாவின் உடல் நலம் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆதிவாசி சப்பயா பரிதாபமாக இறந்தார்.
சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆதிவாசி மக்கள் வயநாடு கலெக்டர் சுகாத்திடம் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார். #tamilnews
கேரள மாநிலம் மானந்தவாடி எடவக கிராம பஞ்சாயத்து பனிய காலனியை சேர்ந்தவர் வேரன். இவரது மனைவி சப்பயா (வயது 61). ஆதிவாசிகளான இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சப்பயாவுக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சப்பயாவுக்கு உடனே மருத்துவம் கிடைக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் ஊசி, மருந்து கொடுத்து நாளைக்கு வரும்படி கூறினர்.
ஆனால் சப்பயாவின் உடல் நலம் மோசமாக உள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் சப்பயாவின் உடல் நலம் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆதிவாசி சப்பயா பரிதாபமாக இறந்தார்.
சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆதிவாசி மக்கள் வயநாடு கலெக்டர் சுகாத்திடம் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X