search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது
    X

    மும்பையில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது

    மும்பையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்தவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
    மும்பை:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மங்கிலால் கஜோதமால் மேக்வால் என்பவர் மும்பைக்கு சுமார் 4 கிலோ எடையுள்ள ஹெராயினை ரெயிலில் கடத்தி வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேக்வாலை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

    மேக்வால் போதைப்பொருளை கடத்தி வர உதவியுள்ளார். இவர் இது போன்று பல முறை மும்பைக்கு ஹெராயினை கடத்தி வந்துள்ளார். இக்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை தேடும் பணியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மொத்த மதிப்பு 6.15 கோடி ரூபாயாகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×