என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் மேல்சபை தேர்தல்- நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல்
Byமாலை மலர்16 April 2018 11:04 AM GMT (Updated: 16 April 2018 11:04 AM GMT)
பீகார் மாநில சட்டமன்ற மேல்சபைக்கு 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் முன்னர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி வகித்திருந்தார்.
இடையில் லாலுவுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதனால், கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக லாலுவுடனான கூட்டணியை முறித்துகொண்ட நிதிஷ் குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல் மந்திரியாக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் மாநில சட்டமன்ற மேல்சபை உறுப்பினர்களாக உள்ள நிதிஷ் குமார், முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி உள்பட 11 பேரின் பதவிக்காலம் மே 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், மேல்சபைக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே மற்றும் மேலும் 4 பேர் சட்டசபை செயலாளர் ராம் சிரேஷ்த் ராய்-இடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பீகார் மாநிலத்தில் முன்னர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி வகித்திருந்தார்.
இடையில் லாலுவுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதனால், கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக லாலுவுடனான கூட்டணியை முறித்துகொண்ட நிதிஷ் குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல் மந்திரியாக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் மாநில சட்டமன்ற மேல்சபை உறுப்பினர்களாக உள்ள நிதிஷ் குமார், முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி உள்பட 11 பேரின் பதவிக்காலம் மே 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், மேல்சபைக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே மற்றும் மேலும் 4 பேர் சட்டசபை செயலாளர் ராம் சிரேஷ்த் ராய்-இடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X