search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து ராகுல் காந்தி நள்ளிரவில் போராட்டம்
    X

    பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து ராகுல் காந்தி நள்ளிரவில் போராட்டம்

    கத்துவா மற்றும் உனா பகுதிகளில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே ராகுல் காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.

    இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார். #RahulGandhi #TamilNews
    Next Story
    ×