search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் முடக்கத்தால் அரசுக்கு ரூ.375 கோடி இழப்பு
    X

    பாராளுமன்றம் முடக்கத்தால் அரசுக்கு ரூ.375 கோடி இழப்பு

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் வீணடிக்கப்பட்ட 250 மணி நேரத்துக்கு கணக்கிட்டால் மத்திய அரசுக்கு ரூ.375 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 9-ந்தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையிலும் நடந்தது.

    இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 68 அமர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தவிர பாராளுமன்றத்தில் 28 மசோதாவும், மாநிலங்களவையில் 39 மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தன.

    எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவையில் 25 சதவீத அலுவல்களும், மாநிலங்களவையில் 35 சதவீத அலுவல்களும் மட்டுமே நடந்தன.

    பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சேர்ந்து 250 மணி நேரம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

    அரசின் கணக்கீட்டு படி இந்த அலுவல்களுக்கான செலவு ஒரு நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் ஆகும். அதன் படி வீணடிக்கப்பட்ட 250 மணி நேரத்துக்கு கணக்கிட்டால் மத்திய அரசுக்கு ரூ.375 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற முடக்கத்துக்கு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் மாறி மாறி ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன. #tamilnews
    Next Story
    ×