என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ விமானங்களில் கொசு விரட்டும் பயணிகள் - வீடியோ இணைப்பு
Byமாலை மலர்10 April 2018 6:49 AM GMT (Updated: 10 April 2018 7:11 AM GMT)
ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் கொசு தொல்லையால் பயணிகள் அவதியுற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #indigo #jetairways
லக்னோ:
பெங்களூரைச் சேர்ந்த சவுரப் ராய் இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான லக்னோ-பெங்களூரு விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது விமானத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சவுரப் விமான ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் ஊழியர்கள் அவரை மரியாதை இல்லாமல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவரை விமானத்திலிருந்து இறங்க வைத்தனர். மேலும், மிரட்டல் விடுத்ததாக சவுரப் புகார் அளித்தார்.
இதுகுறித்து பேசிய இன்டிகோ நிறுவனம், 'சவுரப் ஊழியர்களிடம் கோபமாக நடந்துள்ளார். மேலும் மிரட்டல் விடுவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் கீழே இறக்கப்பட்டார் என தெரிவித்தன. இந்நிலையில், இன்டிகோ நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளது.
அதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலும் பயணிகள் கொசு தொல்லையால் அவதியுற்றனர். அது குறித்து வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. #indigo #jetairways
பெங்களூரைச் சேர்ந்த சவுரப் ராய் இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான லக்னோ-பெங்களூரு விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது விமானத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சவுரப் விமான ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் ஊழியர்கள் அவரை மரியாதை இல்லாமல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவரை விமானத்திலிருந்து இறங்க வைத்தனர். மேலும், மிரட்டல் விடுத்ததாக சவுரப் புகார் அளித்தார்.
இதுகுறித்து பேசிய இன்டிகோ நிறுவனம், 'சவுரப் ஊழியர்களிடம் கோபமாக நடந்துள்ளார். மேலும் மிரட்டல் விடுவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் கீழே இறக்கப்பட்டார் என தெரிவித்தன. இந்நிலையில், இன்டிகோ நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளது.
அதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலும் பயணிகள் கொசு தொல்லையால் அவதியுற்றனர். அது குறித்து வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. #indigo #jetairways
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X