என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் - பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு
புதுடெல்லி:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.
வருகிற 9-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு 7 முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்.
மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும்.
வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும்.
மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.#PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்