என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது - மத்திய அரசு
Byமாலை மலர்3 April 2018 7:26 AM GMT (Updated: 3 April 2018 7:26 AM GMT)
சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #CBSE #CBSEPaperLeaks
புதுடெல்லி:
மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர்.
இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.
இதனால் இந்த இரு பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. இதில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும். 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்னும் முடிவை எதிர்த்தும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் இந்த மறுதேர்வை நடத்த வலியுறுத்தியும் ‘சோஷியல் ஜுரிஸ்ட்’ என்னும் அரசுசாராத தொண்டு நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு கணிதம் கேள்வித்தாள்கள் டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில்தான் கசிந்ததா? அல்லது, நாடு முழுவதும் கசிந்துள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலாத நிலை தற்போது நீடிப்பதால் மறுதேர்வு நடத்தும் தேதி தொடர்பான இறுதி முடிவை எடுப்பதில் குழப்பம் நீடிப்பதாக சி.பி.எஸ்.இ. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து செல்லும் மாணவ-மாணவியர்கள் அடுத்த ஆண்டு முதல் எதை விருப்பப்பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள்தான் மூலக்காரணமாக அமைகிறது. எனவே, மறுதேர்வை விரைவாக நடத்துவது தொடர்பாக ஒரு இறுதி முடிவை எடுத்து வரும் 16-ம் தேதி கோர்ட்டிடம் தெரிவிக்க வேண்டும் என நேற்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #CBSE #CBSEPaperLeaks #10thexam #centralgovt
மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர்.
இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.
இதனால் இந்த இரு பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. இதில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும். 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்னும் முடிவை எதிர்த்தும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் இந்த மறுதேர்வை நடத்த வலியுறுத்தியும் ‘சோஷியல் ஜுரிஸ்ட்’ என்னும் அரசுசாராத தொண்டு நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு கணிதம் கேள்வித்தாள்கள் டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில்தான் கசிந்ததா? அல்லது, நாடு முழுவதும் கசிந்துள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலாத நிலை தற்போது நீடிப்பதால் மறுதேர்வு நடத்தும் தேதி தொடர்பான இறுதி முடிவை எடுப்பதில் குழப்பம் நீடிப்பதாக சி.பி.எஸ்.இ. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து செல்லும் மாணவ-மாணவியர்கள் அடுத்த ஆண்டு முதல் எதை விருப்பப்பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள்தான் மூலக்காரணமாக அமைகிறது. எனவே, மறுதேர்வை விரைவாக நடத்துவது தொடர்பாக ஒரு இறுதி முடிவை எடுத்து வரும் 16-ம் தேதி கோர்ட்டிடம் தெரிவிக்க வேண்டும் என நேற்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #CBSE #CBSEPaperLeaks #10thexam #centralgovt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X