search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை வரும் 27-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி முறையிட்டிருந்தார்.

    அவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லி ஐகோர்ட்டை நாடி இடைக்கால நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. இதனை அடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டு தடை பெற்றார். இந்த தடைக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இதனை அடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என அறிவித்த நீதிபதிகள், கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 27-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. #KartiChidambaram #INXMediaCase
    Next Story
    ×