என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Byமாலை மலர்2 April 2018 10:15 AM GMT (Updated: 2 April 2018 10:15 AM GMT)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை வரும் 27-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி முறையிட்டிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லி ஐகோர்ட்டை நாடி இடைக்கால நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. இதனை அடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டு தடை பெற்றார். இந்த தடைக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இதனை அடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என அறிவித்த நீதிபதிகள், கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 27-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. #KartiChidambaram #INXMediaCase
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி முறையிட்டிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லி ஐகோர்ட்டை நாடி இடைக்கால நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. இதனை அடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டு தடை பெற்றார். இந்த தடைக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இதனை அடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என அறிவித்த நீதிபதிகள், கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 27-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. #KartiChidambaram #INXMediaCase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X