என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்1 April 2018 8:27 AM GMT (Updated: 1 April 2018 8:27 AM GMT)
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சீரமைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். #GSAT6A #ISRO
பெங்களூரு:
தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 29-ம் தேதி மாலை 4.56 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் மற்றும் பணித்திறன் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் இரண்டாம் படிநிலை இயக்கம் கடந்த 31-ம் தேதி (நேற்று) வெற்றிகரமாக நிறைவேறியது.
மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.
இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். #GSAT6A #ISRO
தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 29-ம் தேதி மாலை 4.56 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் மற்றும் பணித்திறன் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் இரண்டாம் படிநிலை இயக்கம் கடந்த 31-ம் தேதி (நேற்று) வெற்றிகரமாக நிறைவேறியது.
மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.
இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். #GSAT6A #ISRO
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X