search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசும் ஊழலும் தண்ணீரும் மீனும் போன்றது - அமித் ஷா கடும் தாக்கு
    X

    காங்கிரசும் ஊழலும் தண்ணீரும் மீனும் போன்றது - அமித் ஷா கடும் தாக்கு

    காங்கிரஸ் கட்சியும் ஊழலும் தண்ணீரும் மீனும் போன்றது என கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்துவரும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #congress #corruption #amitshah
    பெங்களூரு:

    மே மாதம் 12-ம் தேதி சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    பழைய மைசூரு பகுதிக்குட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரித்த அமித் ஷா, அம்மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

    முதல் மந்திரி சித்த ராமைய்யா தலைமையிலான அரசு காங்கிரஸ்காரர்களுக்கு பணம் வழங்கும் ஏ.டி.எம். இயந்திரங்களைப் போன்றது. காங்கிரஸ் கட்சியும் ஊழலும் தண்ணீரும் மீனும் போன்றது. இந்த அரசை தூக்கி எறிய கர்நாடக மக்கள் தீர்மானித்து விட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

    இங்குள்ள மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறதா?, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதா?, கிராமங்களில் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டதா? என அமித் ஷா எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் அங்கு கூடி இருந்த மக்கள் ’இல்லை, இல்லை’ என்று பதிலளித்தனர்.

    எதுவுமே செய்யாத இந்த அரசை ஏன் இன்னும் விட்டுவைக்க வேண்டும்?. வரும் தேர்தலில் இவர்களை விரட்டி அடித்துவிட்டு எடியூரப்பா தலைமையிலான புதிய அரசை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமித் ஷா வாக்குறுதி அளித்தார். #tamilnews #congress #corruption #amitshah
    Next Story
    ×