என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலையில் தொடர்புடைய 7 நக்சல்கள் கைது
Byமாலை மலர்24 March 2018 10:51 PM GMT (Updated: 24 March 2018 10:51 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலையில் தொடர்புடைய 7 நக்சல்களை போலீசார் கைது செய்தனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்டாராம் மற்றும் பலோடி பாரா மிலிட்டரி முகாம் மீது நக்சல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய நக்சலைட்கள் கிஸ்டாராம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கொம்ரம் சாடே (25), மட்கம் ஜோகா (31), மட்கம் ஹிட்மா (30), மட்கம் கங்கா (25), வஞ்சம் அய்டா (34), வஞ்சம் சின்ஹா (32), மாத் வி சுக்கா (30), என 7 நக்சல்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு சி ஆர் பி எப் வீரர்கள் படுகொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. #Tamilnews
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்டாராம் மற்றும் பலோடி பாரா மிலிட்டரி முகாம் மீது நக்சல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய நக்சலைட்கள் கிஸ்டாராம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கொம்ரம் சாடே (25), மட்கம் ஜோகா (31), மட்கம் ஹிட்மா (30), மட்கம் கங்கா (25), வஞ்சம் அய்டா (34), வஞ்சம் சின்ஹா (32), மாத் வி சுக்கா (30), என 7 நக்சல்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு சி ஆர் பி எப் வீரர்கள் படுகொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X