என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குறிப்பிடவில்லை - கர்நாடகா கடிதம்
Byமாலை மலர்23 March 2018 4:48 AM GMT (Updated: 23 March 2018 4:48 AM GMT)
சுப்ரீம் கோர்ட் வழங்கிய இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு குறிப்பிடவில்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூர்:
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய இறுதித்தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. செயல் திட்டம் மட்டுமே உருவாக்க உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சனை தீர்வுக்குழு, கண்காணிப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட இரு அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டின் நதிநீர் பங்கீடு குறித்த தீர்ப்பை அமல்படுத்தி, நீர் பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. #CauveryManagementBoard #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X