search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணை ஏலம் எடுத்து மணந்த வாலிபர் தற்கொலை
    X

    இளம்பெண்ணை ஏலம் எடுத்து மணந்த வாலிபர் தற்கொலை

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இளம்பெண்ணை ஏலத்தில் எடுத்து திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தின் பாக்பட் மாவட்டம் சுரோர் பூர் கிராமத்தில் செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளி முகேஷ். இவர் 4 நாட்களுக்கு முன் அந்த கிராமத்தில் மோனு என்ற இளம்பெண்ணை ரூ.22,000-க்கு ஏலம் எடுத்து திருமணம் செய்தார்.

    அம்மாநிலத்தில் உள்ள விழிப்புணர்வு இல்லாத சில குக்கிராமங்களில் பெண்களை ஏலம் எடுத்து திருமணம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அதன்படி முகேஷ் மோனுவை ஏலத்தில் எடுத்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர் முதலில் ரூ.17,000 பணம் செலுத்தினார். பாக்கி பணத்தை திருமணத்துக்குப் பின் தருவதாக வாக்களித்து இருந்தார். ஆனால் திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன பிறகும் அவர் ரூ.5 ஆயிரம் பாக்கி பணத்தை திருப்பி தரவில்லை.

    இதையடுத்து இளம்பெண் மோனுவின் பெற்றோர் வந்து அவளை கணவரிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டனர். பாக்கி பணத்தை கொடுத்து விட்டு மனைவியை அழைத்துச் செல் என்று தெரிவித்தனர்.

    செங்கல் சூளை தொழிலாளியான முகேஷ் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஏலம் எடுத்த நிலையில் மீதிப்பணம் ரூ.5,000 இல்லாமல் திண்டாடினார். மேலும் பாக்கிப் பணத்துக்காக மனைவியை பிரித்துச் சென்றதால் மனம் உடைந்த முகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். #Tamilnews
    Next Story
    ×