search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையால் கொலை செய்யப்பட்ட ஆதிரா.
    X
    தந்தையால் கொலை செய்யப்பட்ட ஆதிரா.

    திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் குத்திக்கொலை- தந்தை வெறிச்செயல்

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகளை தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பூவாதி கண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமிதா. இந்த தம்பதியின் மகள் ஆதிரா (வயது 22). கல்லூரி படிப்பை முடித்தவர்.

    ஆதிராவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    ஆதிராவும், அவரது காதலரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆதிராவின் பெற்றோர் காதலை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆதிரா தனது காதலில் உறுதியாக இருந்ததால் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது.

    ஆதிரா மேஜர் என்பதால் போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் ராஜன் தனது மகளின் காதலை ஏற்காமல் மகளிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்தநிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஆதிராவும், அவரது காதலரும் இன்று திருமணம் செய்ய திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளில் காதலன் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த தகவல் தெரியவந்ததும் ஆதிராவின் தந்தை ராஜன் ஆத்திரம் அடைந்தார். நேற்று தனது வீட்டில் இருந்த ஆதிராவை, ராஜன் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஆதிராவின் வயிறு உள்பட உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ஆதிரா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர். ராஜனுக்கு ஆதிரா தவிர மேலும் 2 மகள்கள் உள்ளனர். #Tamilnews
    Next Story
    ×