search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் பலி
    X

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் பலி

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள அரம்போரா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, நேற்று மாலை முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகலில் ஹல்மத்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews
    Next Story
    ×