என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீட்டு மோசடியை தடுக்க புதிய சட்ட மசோதா - நாடாளுமன்றத்தில் அறிமுகம்
Byமாலை மலர்20 March 2018 7:46 PM GMT (Updated: 20 March 2018 7:46 PM GMT)
முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபடுவதை தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சீட்டு நடத்தி மோசடி செய்தல், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகளை திரட்டி விட்டு ஓடி விடுதல் போன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.
இப்படி முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபடுவதை தடுக்கிற விதத்தில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒரு சட்ட மசோதாவை தயாரித்து உள்ளது.
கட்டுப்பாடற்ற டெபாசிட்டுகளை தடை செய்யும் மசோதா என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த மசோதாவை, நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு கட்சியினரின் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா நேற்று அறிமுகம் செய்தார்.
மக்களிடம் இருந்து சட்ட விரோதமான டெபாசிட்டுகளை பெறுகிற நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்த மசோதாவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X