search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் மகனுக்கு அரசு வேலை வேண்டும் - ஈராக்கில் பலியானவரின் மனைவி கோரிக்கை
    X

    என் மகனுக்கு அரசு வேலை வேண்டும் - ஈராக்கில் பலியானவரின் மனைவி கோரிக்கை

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோபிந்தர் சிங்கின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
    சண்டிகர்:

    ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டதாக இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    கொலை செய்யப்பட்ட 39 பேரில் கோபிந்தர் சிங்கும் ஒருவர். பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு வேலைக்காக ஈராக்கிற்கு சென்றார். அவருக்கு 19 வயது மகனும், 17 வயது மகளும் இருந்தனர். அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால், அவர் இழப்பு குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், எங்கள் குடும்பத்திற்கு அரசு பண உதவி அளிக்க வேண்டும். மேலும், என் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோபிந்தர் சிங்கின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். #iraq #tamilnews
    Next Story
    ×