என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்பில் 9 பியூன் பதவிக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Byமாலை மலர்20 March 2018 6:23 AM GMT (Updated: 20 March 2018 6:23 AM GMT)
பஞ்சாப் மாநிலம் பதான்டா மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 9 பியூன் பதவிக்கு மொத்தம் 6,028 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
பதான்டா:
பஞ்சாப் மாநிலம் பதான்டா மாவட்ட கோர்ட்டில் பியூன் மற்றும் செயல்முறை சர்வர் பதவி காலியாக இருந்தது.
இதற்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டு இருந்தது.
மொத்தம் 9 இடங்களுக்கு தான் வேலை இருந்தது. 9 பியூன், செயல்முறை சர்வர் பதவிகளுக்கு மொத்தம் 6,028 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அந்த அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.
இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தான். ஆனால் என்ஜினீயரிங் படித்தவர்கள் கூட இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள். முதுகலை பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த பதவிக்கான 3 ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.4,900 முதல் ரூ.10,680 ஆகும்.
பியூன் பதவிக்கு விண்ணப்பித்த பாட்டியாலாவை சேர்ந்த என்ஜினீயரிங் படித்த அர்ஜுன் குமார் கூறியதாவது:-
நான் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும். எந்த வேலையையும் ஏற்றுக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
பஞ்சாப் மாநிலம் பதான்டா மாவட்ட கோர்ட்டில் பியூன் மற்றும் செயல்முறை சர்வர் பதவி காலியாக இருந்தது.
இதற்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டு இருந்தது.
மொத்தம் 9 இடங்களுக்கு தான் வேலை இருந்தது. 9 பியூன், செயல்முறை சர்வர் பதவிகளுக்கு மொத்தம் 6,028 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அந்த அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.
இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தான். ஆனால் என்ஜினீயரிங் படித்தவர்கள் கூட இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள். முதுகலை பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த பதவிக்கான 3 ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.4,900 முதல் ரூ.10,680 ஆகும்.
பியூன் பதவிக்கு விண்ணப்பித்த பாட்டியாலாவை சேர்ந்த என்ஜினீயரிங் படித்த அர்ஜுன் குமார் கூறியதாவது:-
நான் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும். எந்த வேலையையும் ஏற்றுக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X