என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா புஷ்பா எம்.பி.க்கு விவாகரத்து - டெல்லி கோர்ட்டு வழங்கியது
Byமாலை மலர்19 March 2018 6:36 PM GMT (Updated: 19 March 2018 6:36 PM GMT)
சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், அவருடைய கணவருக்கும் இடையேயான திருமண விவாகரத்துக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
புதுடெல்லி:
சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், அவருடைய கணவருக்கும் இடையேயான திருமண விவாகரத்துக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும் இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி மறுமணம் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இது தொடர்பான திருமண அழைப்பிதழ் ஒன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் நேற்று வலம் வந்தது.
இதன் உண்மைத்தன்மை பற்றி அறிந்துகொள்வதற்காக டெல்லி செய்தியாளர்கள் சசிகலா புஷ்பாவை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், அவருடைய கணவருக்கும் இடையேயான திருமண விவாகரத்துக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும் இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி மறுமணம் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இது தொடர்பான திருமண அழைப்பிதழ் ஒன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் நேற்று வலம் வந்தது.
இதன் உண்மைத்தன்மை பற்றி அறிந்துகொள்வதற்காக டெல்லி செய்தியாளர்கள் சசிகலா புஷ்பாவை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X