என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர் ராவ் இன்று சந்திப்பு
Byமாலை மலர்19 March 2018 1:20 AM GMT (Updated: 19 March 2018 1:20 AM GMT)
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தாவுடன் சந்திரசேகர ராவ் இன்று கொல்கத்தாவில் ஆலோசனை நடத்துகிறார்.
ஐதராபாத்:
இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூறி வரும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) சந்திரசேகர் ராவ் மேற்குவங்காளம் செல்கிறார். அங்கு தலைநகர் கொல்கத்தாவில் மாலை 4 மணியளவில் அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.
இந்த தகவலை தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என சந்திரசேகர் ராவ் அறிவித்த உடனேயே, அவரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூறி வரும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) சந்திரசேகர் ராவ் மேற்குவங்காளம் செல்கிறார். அங்கு தலைநகர் கொல்கத்தாவில் மாலை 4 மணியளவில் அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.
இந்த தகவலை தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என சந்திரசேகர் ராவ் அறிவித்த உடனேயே, அவரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X