search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களை ஏமாற்றிய மோடி அரசு தோல்வியடைந்து விட்டது - மன்மோகன் சிங்
    X

    மக்களை ஏமாற்றிய மோடி அரசு தோல்வியடைந்து விட்டது - மன்மோகன் சிங்

    வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #INC #CongressPlenarySession
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் (17-ம் தேதி) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். இது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு ஆகும்.

    சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். நேற்றைய மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றியபோது, வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதாக பேசினார்.
     
    இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்த பாஜக அரசு தோல்வியடைந்து. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.ஸ்.டி வரி விதிப்பு ஆகியவையால் பல சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்து விட்டது என கூறினார்.

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதியிலும் பாஜக அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    இதையடுத்து மற்ற கட்சிகள் பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பமாகிவிட்டது என்று கூறினர். இதை குறிப்பிடும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பா.ஜ.க. தோல்வி அடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். #ManmohanSingh #INC #CongressPlenarySession #tamilnews
    Next Story
    ×