என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பாக். படையினரின் அத்துமீறிய தாக்குதலில் 5 பொதுமக்கள் பலி
Byமாலை மலர்18 March 2018 5:07 AM GMT (Updated: 18 March 2018 5:46 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Poonch #Rajouri
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள மன்கோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கி மற்றும் சிறியரக மோட்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், மூன்று குழந்தைகள் அடக்கம் எனவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அனைத்து எல்லையோர கிராமங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பூஞ்ச் பகுதியிலும் தாக்குதல் நடந்து வருவதாகவும்
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க கூடுதல் படைகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kashmir #Poonch #LOC #Rajouri
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X