search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு ஆயுள் தண்டனை
    X

    90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு ஆயுள் தண்டனை

    மகாராஷ்டிராவில் நோயாளியாக படுக்கையில் கிடந்த 90 வயது மூதாட்டியை கற்பழித்த 53 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:
     
    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள புதார்கட் பகுதியில் 90 வயது மூதாட்டி நோயாளியாக படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது வீட்டின் அருகில் வசித்த விஷ்ணு கிருஷ்ண நலவாடே (53), கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம்  4-ம் தேதி அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதிதி காதம் நலவாடேவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். #Tamilnews 
    Next Story
    ×