என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி
Byமாலை மலர்17 March 2018 9:19 AM GMT (Updated: 17 March 2018 9:19 AM GMT)
பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்தியுள்ளார். #sudarsanpattnaik
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஓவியத்தை பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். ஹாக்கிங் கடந்த புதன்கிழமை காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவரின் மறைவிற்கு தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒடிசா சென்றுள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ராம்நாத் கோவிந்தின் உருவத்தை ஓவியமாக பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். 'வெல்கம் டு ஒடிசா' என்ற வாசகத்துடன் வரைந்துள்ள அவருடைய ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. #sudarsanpattnaik #tamilnews
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஓவியத்தை பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். ஹாக்கிங் கடந்த புதன்கிழமை காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவரின் மறைவிற்கு தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒடிசா சென்றுள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ராம்நாத் கோவிந்தின் உருவத்தை ஓவியமாக பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். 'வெல்கம் டு ஒடிசா' என்ற வாசகத்துடன் வரைந்துள்ள அவருடைய ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. #sudarsanpattnaik #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X