என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்
Byமாலை மலர்14 March 2018 7:51 AM GMT (Updated: 14 March 2018 7:51 AM GMT)
பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் எல்லையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையுனருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வீரர்கள் இன்று காலை கால்ரா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் நாட்டின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்த முயன்றனர். அவர்கள் ஹெராயின் அடங்கிய பண்டல்களை எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்திய பகுதிக்குள் வீறியுள்ளனர்.
அதைக்கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்ட உடன் அவர்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்றனர். அதன்பின் அந்த பண்டல்களை எடுக்க வந்த இந்தியாவைச் சேர்ந்த கடத்தல்காரரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர் அமிர்தசரசைச் சேர்ந்த பல்பீர் சிங் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ ஹெராயின் பண்டல்களின் மொத்த மதிப்பு 45 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
பஞ்சாப் மாநிலம் எல்லையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையுனருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வீரர்கள் இன்று காலை கால்ரா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் நாட்டின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்த முயன்றனர். அவர்கள் ஹெராயின் அடங்கிய பண்டல்களை எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்திய பகுதிக்குள் வீறியுள்ளனர்.
அதைக்கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்ட உடன் அவர்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்றனர். அதன்பின் அந்த பண்டல்களை எடுக்க வந்த இந்தியாவைச் சேர்ந்த கடத்தல்காரரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர் அமிர்தசரசைச் சேர்ந்த பல்பீர் சிங் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ ஹெராயின் பண்டல்களின் மொத்த மதிப்பு 45 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X