search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன் சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதியானவர்- சோனியா காந்தி
    X

    மன்மோகன் சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதியானவர்- சோனியா காந்தி

    மன்மோகன்சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் என்று டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் சோனியா காந்தி பேசினார். #SoniaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சோனியாகாந்தி டெல்லியில் நடந்த ‘இந்தியா டுடே’ கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் எதிர்ப்பும், விவாதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் வாக்குவாதமும், சொற்றொடர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நான் தலைவரா அல்லது வாசிப்பாளரா? என்று என்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது என்பார்வைக்கு எட்டவில்லை.

    ஆனால் மன்மோகன்சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் என்பதை அறிவேன். காங்கிரஸ் கட்சியானது மக்கள் மத்தியில் அமைப்பு ரீதியாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள புதிய முறையை கையாள வேண்டும்.

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். கட்சி அனுமதிக்கும் பட்சத்தில் நான் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்.


    எனக்கான எல்லை என்ன என்பது எனக்கு தெரியும். எனவேதான் மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தேன். காங்கிரசை முஸ்லிம் கட்சி என்று பா. ஜனதா பிரசாரம் செய்கிறது. நானும் ராஜீவ் காந்தியும் பல கோவில்களுக்கு சென்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. நேரு குடும்பத்தை சாராதவர்களாலும் காங்கிரசை காப்பாற்ற முடியும்.

    எதிர்க் கட்சிகளில் ஒரு மித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன். வெற்று கோ‌ஷங்கள் மீது நம்பிக்கை இல்லை. நமது சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. தலித்துகளுக்கு எதிராக அதிகளவில் வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை.

    ஆனால் மாற்று கருத்துகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இதனால் நல்லுறவு நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது.

    ஆதார் அட்டைகள் மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக மாறியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது எனது கருத்துக்களை திணிப்பதில்லை, மேலும் மூத்த தலைவர்களை ராகுல்காந்தி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் கூறுவதும் தவறு.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    Next Story
    ×